Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Wednesday, October 19, 2011

யானையின் அட்டகாசம் - சேதமான அரிசி ஆலை (Rice Mill)

எமது மல்வத்தைக் கிராமத்தில், வேளாண்மை அறுவடை முடிவடைந்த காலப்பகுதிகளில் ஊரை அண்டிய காடுகளில் உள்ள யானைகள் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ ஊருக்குள் வந்து பொதுமக்களின்  சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், மக்களுக்குத் தொல்லைகள் கொடுப்பதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதேபோன்றதொரு சம்பவம் , 2011.10.18 செவ்வாய்கிழமை அன்று இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
                                                                            அம்பாறை (புத்தங்கல) காட்டிற்குள்ளிருந்து ஊரைநோக்கி வந்த யானையொன்று ஊருக்குள் நுழையும் வழியிலுருந்த அரிசி ஆலையொன்றை (Rice Mill) அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.  இதன்போது யானையின் சத்தம் கேட்டதை உணர்ந்த அயலிலிருந்த மக்கள் கூச்சலிட்டுக் கத்தியதால் யானை வந்த வழியே ஓடிச்சென்றுவிட்டது. இச்சம்பவத்தில் அரிசி ஆலையானது பெருமளவு உடைந்திருப்பதுடன் ஓரிரண்டு அரிசி மூடைகளும், சில உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
                                                        இவ்வாறு சேதமடைந்த இந்த அரிசி ஆலை மல்வத்தை புதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்குச் சொந்தமானதாகும்..












0 comments:

Post a Comment